NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?
    IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 04, 2023
    11:09 am
    IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?
    செயற்கை நுண்ணறிவு மென்பொறியாளர்களுக்கு அதிகரிக்கும் தேவை

    இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று மென்பொருள் பொறியாளர்களை ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள போட்டியிட்டிருக்கின்றன. ஸ்ரீனிவாச வேங்கடாசாரி, ஆனந்த் சுக்லா மற்றும் ஸ்டீவன் பேக்கர் ஆகிய மூன்று பொறியாளர்களுக்கும் செம டிமாண்டாம். ஆப்பிளின் தேடுபொறியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு கூகுளில் இணைந்து சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களுக்கு அடிப்படையாக இருக்கும் லாங்குவேஜ் மாடல்களை மேம்படுத்தி வருவதில் பங்காற்றி வருகின்றனர். மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கவனம் பெற்றுவரும் நிலையில், அது சார்ந்த தொழில்நுட்ப திறனுடைய பணியாளர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. மேற்கூறிய மூவரையும் ஆப்பிளிலேயே இருக்குமாரு டிம் குக்கும், கூகுளில் சேருமாரு சுந்தர் பிச்சையும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    2/2

    யார் இவர்கள்? 

    2001-ல் கான்பூர் ஐஐடியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சுக்லா, அதன் பிறகு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 12 வருடங்கள் கூகுளில் பணியாற்றிய பிறகு வெங்கடசாரி மற்றும் பேக்கருடன் சேர்ந்து லேசர்லிங்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்நிறுவனத்தை ஆப்பிள் வாங்கவே 2018-ல் ஆப்பிளில் இணைந்திருக்கிறார்கள். 4 வருடங்களில் ஆப்பிளில் பணி செய்த பின் கடந்த நவம்பர் மாதம் கூகுளில் சேர்ந்திருக்கிறார். 1996-ல் சென்னை ஐஐடியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர் வெங்கடாசாரி. சுக்லாவைப் போலவே இவரும் முதலில் 6 வருடங்கள் கூகுளில் பணி, பின்னர் ஆப்பிளில் 4 வருடங்கள் பணி செய்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் மீண்டும் கூகுளில் இணைந்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆப்பிள்
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு

    ஆப்பிள்

    ட்ராக்கிங் சாதனங்களை பாதுகாப்பாக மாற்ற கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டுமுயற்சி! ஆப்பிள் தயாரிப்புகள்
    ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு! ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  அமேசான்
    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்

    கூகுள்

    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி! செயற்கை நுண்ணறிவு
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    ஊழியர்களுக்கு 'ஸ்நாக்ஸ்' வழங்குவதை நிறுத்திய கூகுள்!  உலகம்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  ஆன்லைன் மோசடி

    செயற்கை நுண்ணறிவு

    ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி! சாட்ஜிபிடி
    ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்! சாட்ஜிபிடி
    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!  சாம்சங்
    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! சாட்ஜிபிடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023