Loading...
மகாபலி மன்னனின் வருகை! இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருவோணம்; 10 நாள் பண்டிகையின் முழு விவரங்கள்
ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் 10 நாள் கொண்டாட்டங்களின் சிறப்பு

மகாபலி மன்னனின் வருகை! இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருவோணம்; 10 நாள் பண்டிகையின் முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
07:04 am

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலத்தின் மிக முக்கியமான மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாளாகப் போற்றப்படுவது ஓணம் பண்டிகையாகும். மலையாள சூரிய நாட்காட்டியின்படி சிங்கம் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா, இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் முதன்மை நாளான திருவோணம் இன்று (ஆகஸ்ட் 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

புராணக் கதை

ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் மகாபலி புராணக் கதை

கேரளாவை ஆண்ட மகாபலி என்ற கொடைள்ளம் கொண்ட அசுர குல மன்னனின் நினைவாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இவரது ஆட்சிக் காலம் பொற்காலமாகக் கருதப்பட்டதால், தேவலோகத்தினர் விஷ்ணுவின் உதவியை நாடினர்.

மகாபலியின் அகந்தையை அடக்க விஷ்ணு வாமனன் என்ற குள்ளமான அந்தணராக உருவெடுத்து, மூன்றடி மண் கேட்டார்.

முதல் இரு அடிகளில் பூமி மற்றும் விண்வெளியை அளந்த வாமனனுக்கு, மூன்றாவது அடியாகத் தனது தலையையே மகாபலி அளித்து பாதாள உலகிற்கு சென்றார்.

அவரது பக்தியால் மகிழ்ந்த விஷ்ணு, ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களைக் காண அவருக்கு அருள்புரிந்தார்.

மன்னன் மகாபலியின் அந்த வருகையே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

10 நாள் கொண்டாட்டம்

10 நாட்கள் நடைபெறும் வண்ணமயமான கொண்டாட்டங்கள்

ஓணம் திருவிழா அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி 'திருவோணம்' நாளில் உச்சத்தை அடைகிறது.

இந்த 10 நாட்களில் கேரளா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

நாள் 1 - அத்தம்: உள்ளூர் கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் கொண்டாட்டம் தொடங்குகிறது. வீடுகளின் வாசலில் பூக்களம் போடத் தொடங்கி, தினமும் ஒரு புதிய அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

நாள் 2 - சித்திரா: வீடுகளைத் தூய்மைப்படுத்தி, பூக்களத்தின் அளவை மேலும் பெரிதாக்கும் பணிகளை மேற்கொள்வர்.

நாள் 3 - சோதி: குடும்பத்தினருக்குப் புதிய ஆடைகள் ('ஓணக்கோடி') மற்றும் பரிசுகளை வாங்குவதற்கான வர்த்தக நாளாக அமைகிறது.

நாள் 4 - விசாகம்: பண்டிகையின் முதன்மை நாட்கள் நெருங்குவதால் வீடுகளில் பலகாரங்கள் மற்றும் தயாரிப்புப் பணிகள் தீவிரமடையும்.

ADVERTISEMENT

10 நாள் கொண்டாட்டம்

வல்லம்களி படகுப் போட்டிகள்

நாள் 5 - அனிஷம்: கேரளாவின் புகழ்பெற்ற வல்லம்களி என்ற பாம்பன் படகுப் போட்டிகள் பம்பை நதியில் மிகவும் உற்சாகமாக நடைபெறும்.

நாள் 6 - திருக்கேட்டா: கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரக் கூட்டங்கள் ஆங்காங்கே விமரிசையாக நடத்தப்படும்.

நாள் 7 - மூலம்: மிகவும் சிக்கலான மற்றும் வண்ணமயமான புதிய பூக்கள வடிவங்களை உற்சாகத்துடன் அமைப்பார்கள்.

நாள் 8 - பூராடம்: மகாபலி மற்றும் வாமன உருவங்களை உணர்த்தும் திரிக்காக்கர அப்பன் என்ற களிமண் பிரமிடு வடிவ சிலைகளை செய்து பூக்களத்தில் வைப்பார்கள்.

ADVERTISEMENT

10 நாள் கொண்டாட்டம்

திருவோணம் கொண்டாட்டம்

நாள் 9 - உத்திராடம்: முதல் ஓணம் எனக் கருதப்படும் இந்நாளில், திருவோணத்திற்குத் தேவையான அனைத்துக் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தயாராவார்கள்.

நாள் 10 - திருவோணம்: பண்டிகையின் மிக முக்கிய நாளான இன்று, அனைவரும் புத்தாடை அணிந்து, வாழையிலையில் 11 முதல் 13 வகையான கறிகளுடன் கூடிய பிரம்மாண்டமான ஓண சத்யா விருந்தை சமைத்து உண்டு மகிழ்வார்கள்.

ADVERTISEMENT