Loading...
சாதாரண காய்ச்சல் இல்லை, உயிருக்கே ஆபத்து! புற்றுநோய் நோயாளிகளைத் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்; மருத்துவர்கள் தீவிர எச்சரிக்கை
புற்றுநோய் நோயாளிகளுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் ஆபத்து

சாதாரண காய்ச்சல் இல்லை, உயிருக்கே ஆபத்து! புற்றுநோய் நோயாளிகளைத் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்; மருத்துவர்கள் தீவிர எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2026
12:02 pm

செய்தி முன்னோட்டம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கான சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவது தீவிரமான உயிராபத்தை உருவாக்கக்கூடும் என மூத்த புற்றுநோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் சாதாரண வைரஸ் தொற்றுகள் கூட இவர்களின் உடலில் தீவிரமடைந்து நுரையீரலைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர பாதிப்புகள்

H1N1 தொற்றால் ஏற்படும் தீவிர உடல்நலப் பாதிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு H1N1 தொற்று ஏற்படும் போது, அது மிக வேகமாக நியூமோனியா, பாக்டீரியா தொற்றுகள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு கணிசமாகக் குறைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகிறது.

சாதாரணமாகக் குணமாகக்கூடிய வைரஸ் பாதிப்பு, புற்றுநோயாளிகளின் பலவீனமான உடலமைப்பில் தீவிரமடைந்து உயிரிழப்பு வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

கவனிக்க வேண்டிய அறிகுறிகளும் உடனடியாகச் செய்ய வேண்டியவைகளும்

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி மற்றும் கடும் சோர்வு ஆகியவை H1N1 தொற்றின் முதன்மை அறிகுறிகளாகும்.

சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

புற்றுநோய் நோயாளிகளுக்குத் தொடர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் அல்லது ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்பக்கட்டத்திலேயே ஆன்டிவைரல் சிகிச்சைகளைத் தொடங்குவது தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.

ADVERTISEMENT

தடுப்பு முறைகள்

தொற்றிலிருந்து தப்பிப்பதற்கான தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி

புற்றுநோய் நோயாளிகள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுப் கழுவுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.

மேலும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுத் தகுந்த நேரத்தில் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

நோயாளியைக் கவனித்துக்கொள்ளும் குடும்ப உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது வீட்டிற்குள் தொற்று பரவுவதைத் தடுக்கும்.

முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே புற்றுநோயாளிகளை இத்தகைய ஆபத்தான வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

ADVERTISEMENT