NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்
    இந்தியா

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்
    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023, 12:48 pm 1 நிமிட வாசிப்பு
    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்
    தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண் மரணம்

    திருப்பூர், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பூஜா, பெற்றோர் இறந்து விட்டதால் மாமா வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரோடு பூஜாவிற்கு கடந்த ஓராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக லோகேஸ்வரன் பூஜாவை தவிர்த்து வந்ததால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகேஸ்வரனை பூஜா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலை, பனப்பாளையம் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு லோகேஸ்வரன் பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டு அழைத்து சென்றுள்ளார். அங்கு, பூஜாவை தலையில் அடித்த லோகேஸ்வரன், அவர் மயங்கிய பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான்.

    'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கதறி ஓடி வந்த இளம்பெண்-சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    தீ பற்றிய நிலையில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று பூஜா தட்டம்பாளையம் சாலையில் ஓடி வந்துள்ளார். அவரை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள். மேலும் பூஜாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பூஜாவை போலீசார் விசாரித்த போது, மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பூஜா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கிருந்து பைக்கில் தப்ப முயன்ற லோகேஸ்வரன் கீழே விழுந்து காயமானதால் அவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திருப்பூர்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    திருப்பூர்

    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023