NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
    இந்தியா

    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!

    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023, 05:58 pm 1 நிமிட வாசிப்பு
    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
    குழந்தை விட்டு சென்ற பொம்மையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே

    கடந்த ஜனவரி 3ஆம் தேதி விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த அதே ரயில் பெட்டியில் அட்னான் என்ற 19 மாத குழந்தையும் அவனது பெற்றோரும் பயணம் செய்தனர். பயணம் முழுவதும் அட்னான் ஒரு ரயில் பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறான். அவனுடன் பயணம் செய்தவர்கள் யாராலும் அந்த பொம்மையை தொட கூட முடியவில்லை. யார் அதை தொட்டாலும் கத்தி கூச்சலிட்டிருக்கிறான் அந்த வாண்டு சிறுவன். இந்நிலையில், பயணம் முடிந்து கிஷன்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கும் போது, அட்னான் எப்படியோ அந்த பொம்மையை ரயில் இருக்கையிலேயே விட்டு சென்றுவிட்டான்.

    அவசர உதவி எண் மூலம் குழந்தையை கண்டறிந்தது:

    குழந்தை அட்னான், தனக்கு பிடித்த பொம்மையை ரயிலிலேயே விட்டு சென்றுவிட்டான் எனபதை அறிந்த விபூதிபூஷன் பட்நாயக், உடனே 139 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதற்கு, மக்கள் விட்டு செல்லும் முக்கியமான பொருட்களைத் திருப்பி கொடுப்பதற்காக மட்டும் இந்த ஹெல்ப்லைன் என்று உதவி மையம் தெரிவித்தது. "நமக்கு முக்கியமாக ஆயிரம் விலையுர்ந்த பொருட்கள் இருக்கலாம். ஆனால், அந்த குழந்தையை பொறுத்தவரை இந்த பொம்மை ரயில் தானே முக்கியமானது'" என்ற அர்த்தத்தில் பட்நாயக் விளக்கம் அளித்திருக்கிறார். இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பொம்மை ரயிலை அட்னானிடம் ஒப்படைக்க முன்வந்தனர். இதன் பிறகு, அட்னானின் முகவரியை கண்டறிவதற்காகவே ஒரு தனி குழு அமைக்கப்பட்டு, குழந்தையிடம் பொம்மை ரயில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    ரயில்கள்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    ரயில்கள்

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை சென்னை
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023