NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!
    குழந்தை விட்டு சென்ற பொம்மையை பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே

    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜனவரி 3ஆம் தேதி விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அவர் இருந்த அதே ரயில் பெட்டியில் அட்னான் என்ற 19 மாத குழந்தையும் அவனது பெற்றோரும் பயணம் செய்தனர்.

    பயணம் முழுவதும் அட்னான் ஒரு ரயில் பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறான்.

    அவனுடன் பயணம் செய்தவர்கள் யாராலும் அந்த பொம்மையை தொட கூட முடியவில்லை.

    யார் அதை தொட்டாலும் கத்தி கூச்சலிட்டிருக்கிறான் அந்த வாண்டு சிறுவன்.

    இந்நிலையில், பயணம் முடிந்து கிஷன்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கும் போது, அட்னான் எப்படியோ அந்த பொம்மையை ரயில் இருக்கையிலேயே விட்டு சென்றுவிட்டான்.

    உதவி

    அவசர உதவி எண் மூலம் குழந்தையை கண்டறிந்தது:

    குழந்தை அட்னான், தனக்கு பிடித்த பொம்மையை ரயிலிலேயே விட்டு சென்றுவிட்டான் எனபதை அறிந்த விபூதிபூஷன் பட்நாயக், உடனே 139 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

    அதற்கு, மக்கள் விட்டு செல்லும் முக்கியமான பொருட்களைத் திருப்பி கொடுப்பதற்காக மட்டும் இந்த ஹெல்ப்லைன் என்று உதவி மையம் தெரிவித்தது.

    "நமக்கு முக்கியமாக ஆயிரம் விலையுர்ந்த பொருட்கள் இருக்கலாம். ஆனால், அந்த குழந்தையை பொறுத்தவரை இந்த பொம்மை ரயில் தானே முக்கியமானது'" என்ற அர்த்தத்தில் பட்நாயக் விளக்கம் அளித்திருக்கிறார்.

    இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பொம்மை ரயிலை அட்னானிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.

    இதன் பிறகு, அட்னானின் முகவரியை கண்டறிவதற்காகவே ஒரு தனி குழு அமைக்கப்பட்டு, குழந்தையிடம் பொம்மை ரயில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரயில்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு இந்தியா
    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு! இந்திய மாநிலங்கள்
    108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்! மோடி
    சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம் இந்தியா

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025