NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு 
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு

    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

    இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    மேலும் குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க 139 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க வேண்டும் என்று எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் முதல்கட்டமாக 11 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

    விவகாரம் 

    டி.என்.ஏ. பரிசோதனை நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடத்தப்படும்

    ஆனால் அந்த 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் வெறும் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஆஜராகினர்.

    மீதமுள்ள 8 பேர் ஆஜராகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனையடுத்து தற்போது கூடுதலாக 10 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இதனை ஏற்ற நீதிமன்றமும் அதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனடிப்படையில் நாளை(மே.,5) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 10 பேருக்கு டி.என்.ஏ.பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இந்த விசாரணை ஆணையத்தலைவர் நீதிபதி சத்திய நாராயணன் இந்த விவகாரம் குறித்த விசாரணையில் விரைவில் களமிறங்குவார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    மேலும் இதற்காக அவர் வரும் 6ம் தேதி புதுக்கோட்டை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சிபிசிஐடி
    வேங்கை வயல்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    தமிழ்நாடு

    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்  சென்னை
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  விருதுநகர்
    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்  மதுரை
    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா  கோவில் திருவிழா

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் இந்தியா
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விழுப்புரம்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025