NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்
    சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவள விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

    மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவள விழா நடந்தது.

    இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.

    அதன் பின்னர் மாணவர்களிடம் அவர் பேசுகையில், இணையத்தள வசதியை மாணவர்கள் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து ஆளுநர் அவர்கள் பவள விழா கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து, சிவானந்த சரஸ்வதி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த கலந்துரையாடலின் பொழுது மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் பேசுகையில் தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேரமும் இணையத்தள வசதி கிடைக்கிறது என்று குறிப்பிட்டு பேசினார்.

    கேள்வி பதில்

    மாணவர்களோடு கலந்துரையாடல் - 24 மணிநேர இணையத்தள சேவை

    தொடர்ந்து பேசிய அவர் தற்போது கிடைக்கும் இந்த 24 மணிநேர இணையத்தள சேவையை முறையாக பயன்படுத்தினால் அதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய கல்வியில் வெற்றிபெற வேண்டுமெனில், தங்களது பலத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, ஆலமரத்தின் விதை சமையலுக்கு பயன்படும் கடுகை விட சிறியது.

    ஆனால் அது மரமாகும் பொழுது மிக பெரிதாக வளரும் வலிமை கொண்டது என்று கூறினார்.

    இதற்கிடையில் தமிழ்நாட்டில் தங்களுக்கு பிடித்த உணவு எது என்று மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு நெய் சேர்த்த பொங்கல் மற்றும் இனிப்பு வகையில் கேசரி பிடிக்கும் என்று அவர் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்

    தமிழ்நாடு

    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை பொங்கல் திருநாள்
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025