NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

    உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    சட்டத்தை இயற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபையின் இரண்டாவது நாளான இன்று, உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பொது சிவில் சட்ட மசோதா இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை(யுசிசி) ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.

    பொதுவான தனிப்பட்ட சட்டங்களை நிறுவும் நோக்கத்துடன் UCC மசோதாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவை அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டது.

    இன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு அமர்வு தொடங்கும் போது UCC மசோதாவை முதல்வர் தாமி தாக்கல் செய்வார்.

    உத்தரகாண்ட்

    இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் UCC மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்:

    மகன் மற்றும் மகளுக்கு சமமான சொத்துரிமை

    முறையான மற்றும் முறைகேடான குழந்தைகளுக்கிடையேயான வேறுபாட்டை நீக்குதல்

    தத்தெடுக்கப்பட்ட மற்றும் உயிரியல் ரீதியாக பிறந்த குழந்தைகளை உள்ளடக்கிய சம சொத்துரிமை

    பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கு முழுமையான தடை

    அனைத்து மதங்களிலும் உள்ள பெண்களுக்கு பொதுவான திருமண வயது

    விவாகரத்துக்கு ஒரே மாதிரியான காரணங்கள் மற்றும் நடைமுறைகளை அமல்படுத்துதல்

    நான்கு தொகுதிகளையும் 740 பக்கங்களையும் கொண்ட சீரான குடிமைச் சட்டத்தின் இறுதி வரைவு பிப்ரவரி 2ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவால் முதல்வர் தாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி காவல்துறை
    கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம் நிலச்சரிவு
    உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம் கனமழை
    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி ஹிமாச்சல பிரதேசம்

    உச்ச நீதிமன்றம்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி கைது
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை
    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  கேரளா
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025