NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்

    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்

    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாள் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று மக்களால் கூறப்பட்டு வருகிறது.

    அப்பேற்பட்ட புகழ்மிக்க திருப்பதி கோயில் குறித்த பெரிதும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை இந்தப்பதிவு தெரிவிக்கவுள்ளது.

    அதன்படி, திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப்பால், தயிர், மோர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள், துளசிஇலைகள் என அனைத்தும் ஒரு கிராமத்தில் இருந்து பெருமாளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறதாம்.

    அந்த கிராமமே பெருமாளுக்காக வேலைபார்க்கும் நிலையில், அந்த கிராமத்திற்கு இதுவரை யாரும் சென்றதில்லையாம்.

    திருப்பதியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    தொடர்ந்து பெருமாள் பூலோகம் வந்த போது நிகழ்ந்த போர்க்களத்தில் அவரது முடியில் சிலவற்றினை இழந்துள்ளார்.

    பணக்கார கடவுள்

    திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதன் வரலாறு

    அதனை அறிந்த காந்தர்வ பேரரசி நீலாதேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாள் சிலை முன்பு வைத்து, ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார்.

    அதனை ஏற்றுக்கொண்ட பெருமாளும் அதனை ஏற்றுக்கொண்டாராம்.

    இதனால் பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டுள்ள முடி உண்மையானது என கூறப்படுகிறது.

    மேலும் இதனால் தான் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் முடியினை காணிக்கையாக கொடுப்பதாக வரலாறு கூறுகிறது.

    மேலும் திருப்பதி மூலஸ்தானத்தில் பெருமாள் சிலை நடுவில் இருப்பதுபோல் தெரியும்.

    ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் அந்த சிலை மூலஸ்தானத்தின் வலதுப்பக்க மூலையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    பெருமாள் சிலை பின்புறம் காதை வைத்துக்கேட்டால் கடல் அலைகள் சத்தம் கேட்குமாம்.

    அதனால் அவர் பாற்கடலில் இருக்கும் அமைப்பு கண்ணுக்கு தெரியாமல் உள்ளது என்றும் நம்பப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு மாநிலங்கள்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் மாநில அரசு
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025