NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
    இந்தியா

    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023, 03:27 pm 1 நிமிட வாசிப்பு
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
    கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கைது

    கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு(33) என்பவரிடமிருந்து 1.2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து அவர் கஞ்சா கடத்தி, இங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சந்திரபாபு வீட்டின் அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து உள்ளூரில் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து மொத்தம் 8.2கிலோ கஞ்சா மற்றும் ஓர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சந்திரபாபு அளித்த தகவலையடுத்து 8பேரை போலீசார் கைதுசெய்தனர்.

    பணிமாற்றம் ஆனபிறகும் கஞ்சா கும்பலிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கிய மகேந்திரன்

    தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சைபர்கிரைம் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேந்திரன் (35) என்பவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிகொண்டு கஞ்சா விற்பனை பின்னணியில் இருந்து வந்துள்ளார். மகேந்திரன் கடந்த 2018ம்ஆண்டு முதல் 2020ம்ஆண்டு வரை கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் உடந்தையாக இருந்துள்ளார். ஈரோட்டிற்கு பணிமாற்றம் செய்தபிறகும் தொடர்ந்து அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கி வந்துள்ளார் என்று தெரியந்துள்ளது. அவர்கள் கூறியதை உறுதிப்படுத்திய பட்சத்தில் போலீசார் தற்போது மகேந்திரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    காவல்துறை
    கோவை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    காவல்துறை

    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா

    கோவை

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் காவல்துறை
    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மதுரை
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல் கொரோனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023