NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது
    கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கைது

    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    இதனையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு(33) என்பவரிடமிருந்து 1.2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவில் இருந்து அவர் கஞ்சா கடத்தி, இங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் சந்திரபாபு வீட்டின் அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து உள்ளூரில் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து மொத்தம் 8.2கிலோ கஞ்சா மற்றும் ஓர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சந்திரபாபு அளித்த தகவலையடுத்து 8பேரை போலீசார் கைதுசெய்தனர்.

    பரபரப்பு சம்பவம்

    பணிமாற்றம் ஆனபிறகும் கஞ்சா கும்பலிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கிய மகேந்திரன்

    தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஈரோடு மாவட்டம் சைபர்கிரைம் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேந்திரன் (35) என்பவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிகொண்டு கஞ்சா விற்பனை பின்னணியில் இருந்து வந்துள்ளார்.

    மகேந்திரன் கடந்த 2018ம்ஆண்டு முதல் 2020ம்ஆண்டு வரை கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

    அப்பொழுது அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் உடந்தையாக இருந்துள்ளார்.

    ஈரோட்டிற்கு பணிமாற்றம் செய்தபிறகும் தொடர்ந்து அவர் கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கி வந்துள்ளார் என்று தெரியந்துள்ளது.

    அவர்கள் கூறியதை உறுதிப்படுத்திய பட்சத்தில் போலீசார் தற்போது மகேந்திரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025