NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?
    தமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல்!

    சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கடந்த 1 வாரத்தில் 20 காட்டு பன்றிகள் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. மொத்தமாக சுமார் 50 காட்டு பன்றிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது.

    இந்நிலையில், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றித்திரியும் 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளும் கடந்த ஒரு வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

    இதைத்தொடர்ந்து, இறந்த காட்டுப்பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, ​​ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதால் அவை உயிரிழந்தது தெரியவந்தது.

    காய்ச்சல்

    மாவட்ட ஆட்சியர் பேட்டி:

    இதையடுத்து, தமிழக வனத்துறையினர் சில காவலர்களை அனுப்பி, அடர்ந்த வனப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கவனித்து கொள்ளும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    "முதுமலை புலிகள் காப்பகத்தில்(MTR) காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவது தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களையோ அல்லது மற்ற காட்டு விலங்குகளையோ பாதிக்க வாய்ப்பில்லை."

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வைரஸ் பரவி வருவதால், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் குறித்து, அந்த மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய கால்நடை பராமரிப்புத்துறையினர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழக அரசு
    இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம் இந்தியா
    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025