NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    12:19 pm
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று

    தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த நம்மாழ்வாரின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல்.,6). விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பினை முடித்துள்ளார். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவிஆய்வாளாராக சேர்ந்த இவரால் பசுமை புரட்சியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பணியில் இருந்து நீங்கிய அவர், இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்க கொண்டுவரப்பட்ட பசுமை புரட்சி காரணமாக ஏற்படும் விளைவுகளை எழுத்து மற்றும் உரையாடல் மூலமாக தனது வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார். பல கிராமங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு இயற்கைவிவசாயத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இன்றைய படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்ப முக்கிய காரணம் நம்மாழ்வாரின் முப்பதாண்டுகால பயணம் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    2/2

    போராட்டக்களத்திலேயே உயிர்நீத்த நம்மாழ்வார்

    இயற்கை விவசாயம் மூலம் பயிர்கள் சேதமாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து, அதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார். வீரியரக விதைகளின் வருகையால் நமது பாரம்பரிய விதைகள் அழிவினை சந்திக்கும் தருவாயில் இருந்தது. அந்நிலையில் மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி, குடவாழை, குழியடிச்சான் போன்ற நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல்வகைகளை விவசாயிகளுக்கு மீட்டு தந்தவர் நம்மாழ்வார். மேலும் நம்நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையினைப்பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டெடுத்தவர் நம்மாழ்வார். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் இயற்கைவிவசாயத்தை முழுவதுமாக கொன்டுவரப்போராடி, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து தொடர்ந்து போராடி, போராட்டக்களத்திலேயே தனது உயிரினை விட்டார். மகாத்மா காந்தியை போல் மேல்சட்டையினை துறந்து எளிமையான வாழ்வினை வாழ்ந்த இவர் 2013ம்ஆண்டு டிசம்பர் 30ம்தேதி காலமானார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    பிறந்தநாள்
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சுகாதாரத் துறை
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் சட்டமன்றம்
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம் சென்னை
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிவகங்கை

    பிறந்தநாள்

    'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்! கோலிவுட்
    இன்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் 29வது பிறந்தநாள் கோலிவுட்
    'ஜிமிக்கி பொண்ணு' ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று, 27வது பிறந்தநாள் கோலிவுட்
    'சாக்லேட் பாய்' 12B ஷாம் பிறந்தநாள் இன்று! கோலிவுட்

    மாவட்ட செய்திகள்

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தமிழ்நாடு
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து காவல்துறை
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023