NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்
    இந்தியா

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 02:28 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்
    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்

    நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பினை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் தற்போது இது குறித்து ஓர் அறிவிப்பினை அறிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியா முழுவதும் கொரோனா அதிகளவில் அதிகரித்து வருகிறது. இன்று(மார்ச்.,31) 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.,31) 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    மருத்துவமனைகளில் இருந்து பரவும் நோய் தொற்று

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தொற்று குறைவாக இருந்தாலும் ஆரம்ப காலத்திலேயே தீவிர கவனம் செலுத்தும்படி தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார். மேலும் எந்த நோயாக இருந்தாலும் அது மருத்துவமனைகளில் இருந்தே பரவ துவங்கும். அதனால் நாளை(ஏப்ரல்.,1) முதல் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என அனைவருமே நிச்சயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கொரோனா
    அரசு மருத்துவமனை

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 3,016 கொரோனா பாதிப்பு இந்தியா
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும் தமிழ்நாடு
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    அரசு மருத்துவமனை

    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023