NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 

    எழுதியவர் Nivetha P
    Sep 02, 2023
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் அந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தினை சேர்ந்த 80-ராதா நல்லூர் கிராமத்திலுள்ள அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் வீரமணி தபெ. செண்டாய்.

    இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி திருக்கடையூர் என்னும் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

    அப்போது அவரை கதண்டு என்னும் வகையினை சேர்ந்த விஷ தன்மை அதிகமுள்ள வண்டுகள் தாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    நிதி 

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் மரணம் 

    மேலும் அந்த செய்தி குறிப்பில், வண்டுகள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபருக்கு திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(செப்.,2) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

    இதனை கேட்டு மிகவும் வேதனையுற்றேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து அவர், "உயிரிழந்த வீரமணி குடும்பத்தாருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு மருத்துவமனை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    மு.க ஸ்டாலின்

    தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு  தமிழ்நாடு
    நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம் அப்துல் கலாம்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது அமைச்சரவை கூட்டம்  மணிப்பூர்
    ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு  நிதியமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025