NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
    இந்தியா

    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 06:50 pm 1 நிமிட வாசிப்பு
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி 
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தினை சேர்ந்த 80-ராதா நல்லூர் கிராமத்திலுள்ள அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் வீரமணி தபெ. செண்டாய். இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி திருக்கடையூர் என்னும் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவரை கதண்டு என்னும் வகையினை சேர்ந்த விஷ தன்மை அதிகமுள்ள வண்டுகள் தாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் மரணம் 

    மேலும் அந்த செய்தி குறிப்பில், வண்டுகள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபருக்கு திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(செப்.,2) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதனை கேட்டு மிகவும் வேதனையுற்றேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர், "உயிரிழந்த வீரமணி குடும்பத்தாருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அரசு மருத்துவமனை
    மு.க ஸ்டாலின்

    அரசு மருத்துவமனை

    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  சென்னை
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து  தமிழ்நாடு
    மதுரை மாரத்தான் போட்டி - திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவர்  மதுரை
    வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு  வேங்கை வயல்

    மு.க ஸ்டாலின்

    'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு எதிர்க்கட்சிகள்
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு
    தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023