NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவி வருகிறது.

    அதுமட்டுல்லாமல் அது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.

    இந்த விவகாரம் நேற்று நடந்த பீகார் மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்துள்ளது.

    அதன்படி, இது குறித்த உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    அந்த கோரிக்கையினை ஏற்று இந்த விவகாரத்தை நேரில் ஆராய தமிழகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் தற்போது தெரிவித்துள்ளார்.

    4 பேர் கொண்ட குழு

    வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை

    அதன்படி தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ள பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நால்வரில் பாலமுருகனும், கண்ணனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    அந்த குழு தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்கள்.

    மேலும் பீகார் மாநில தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மத்திய பிரதேசம்
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ பள்ளி மாணவர்கள்
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்

    இந்தியா

    மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல் உச்ச நீதிமன்றம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்! சேமிப்பு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025