NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸுக்கு பதிலடி கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2023
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

    கௌதம் அதானியின் சமீபத்திய பங்குச் சந்தை பிரச்சனைகள் 'இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை' தூண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி 'கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்' என்றும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் சமீபத்தில் கூறி இருந்தார்.

    அதானி பிரச்சனைகளால் "இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது மோடி வைத்திருக்கும் பிடி பலவீனப்படுத்தப்படும். இந்தியாவிற்கு தேவையான நிறுவன சீர்திருத்தங்கள் ஏற்படும். இந்தியாவில் ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், "பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறி இருந்தார்.

    இந்தியா

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

    வயதானவர், கோடீஸ்வரர் ஜார்ஜ்-சோரஸ் போன்ற ஆட்கள் நியூயார்கில் அமர்ந்து கொண்டு உலகம் முழுவதும், தங்களின் கருத்துகள் படியே இயங்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் செல்வத்தை பயன்படுத்தி கதைகளைக் கட்டமைக்கிறார்கள்.

    இவரை போன்ற ஆட்கள் எல்லாம் அவர்களுக்கு விருப்பமானவர்கள் தேர்தலில் ஜெயித்தால் அதை நல்லது என்பார்கள். அதே நேரம், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஜனநாயக குறைபாடு என்பார்கள்.

    எங்கள் ஜனநாயகத்தில் எங்களால் வாக்களிக்க முடிகிறது. இதற்கு முன் அப்படி இருந்ததில்லை.

    தேர்தல் முடிவுகள் தீர்க்ககமாக உள்ளன. தேர்தல் முடிவுகள் சரியில்லை என்று நீதிமன்றத்தை நாடும் நாடு எங்களுடையது அல்ல.

    முன்பும், நாங்கள் முஸ்லிம்களிடம் இருந்து குடியுரிமையை பறித்துவிடுவோம் என்று அவர் கூறினார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' டெல்லி
    உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு உலக செய்திகள்
    வைரல் வீடியோ: பெண் காவலரைத் தள்ளிவிட்ட பாஜக தலைவர் பாஜக
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    மோடி

    வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! தமிழ்நாடு
    மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி இந்தியா
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! அமித்ஷா
    பிரேசில் அதிபர் மாளிகைக்குள் புகுந்து கலவரம்: பிரதமர் மோடி வருத்தம் உலகம்

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது மோடி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025