NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
    இந்தியா

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022, 10:42 am 1 நிமிட வாசிப்பு
    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
    தமிழக மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு'

    தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது. அதன்படி, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு திட்டம் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கிகள் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோயால் பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், அதன் பழைய வாழ்விடங்களை மேம்படுத்தி அதற்கு மீண்டும் அறிமுகம் செய்தல், சோலை புல்வெளிகளை அமைத்தல் போன்ற பணிகள் துவங்கப்படும்.

    உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வரையாடு வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும்

    மேலும் வரையாட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு தினமாக கடைபிடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வரையாடு அழிந்து வரும் இனம் என்று அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 3,122 வரையாடுகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த வரையாடு இனம் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தரவு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாத காரணத்தினால் தற்போது தமிழகம், கேரளாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இத்திட்டத்தின் மூலம், அவற்றின் வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வாழ்வதற்கு ஏதுவான சூழல் அமைக்கப்படுவதோடு, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா

    தமிழக அரசு

    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023