NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
    தமிழக மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு'

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது.

    அதன்படி, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு திட்டம் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    குறிப்பாக ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, ஒலிபெருக்கிகள் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோயால் பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், அதன் பழைய வாழ்விடங்களை மேம்படுத்தி அதற்கு மீண்டும் அறிமுகம் செய்தல், சோலை புல்வெளிகளை அமைத்தல் போன்ற பணிகள் துவங்கப்படும்.

    வரையாடு எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை

    உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வரையாடு வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும்

    மேலும் வரையாட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 7ம் தேதி வரையாடு தினமாக கடைபிடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வரையாடு அழிந்து வரும் இனம் என்று அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 3,122 வரையாடுகள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த வரையாடு இனம் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தரவு திட்டமிடலுக்கான புரிதல் இல்லாத காரணத்தினால் தற்போது தமிழகம், கேரளாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

    இத்திட்டத்தின் மூலம், அவற்றின் வாழ்விடங்கள் மீட்கப்பட்டு, வாழ்வதற்கு ஏதுவான சூழல் அமைக்கப்படுவதோடு, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக

    தமிழ்நாடு

    38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
    கேரளாவில் மீண்டும் நர பலியா? - காவல் துறை இந்தியா
    பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை! இந்தியா
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் எடப்பாடி கே பழனிசாமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025