NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
    உலக கால்பந்து போட்டியில் வென்ற அர்ஜெண்டினா அணியினர்(படம்: The States Man)

    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 22, 2022
    10:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர்.

    நேற்று முன்தினம் உலக கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்கள் ஒவ்வொரு முறை கால்பந்து போட்டிகள் நடக்கும் போதும் போஸ்டர் ஒட்டுவது, கேக் வெட்டுவது போன்ற காரியங்களை செய்வர்.

    அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போன்ற அணிகளுக்கான ரசிகர்கள், குழுக்களாக இணைந்து கால்பந்து விளையாட்டை கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில், நேற்று முன்தினம், அர்ஜெண்டினா அணி கால்பந்து இறுதி போட்டிகளில் வென்றது.

    இந்த மாபெரும் வெற்றியை அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

    ஆனால், இந்த கொண்டாட்டமே சிறிது நேரத்தில் வன்முறையாக மாறிவிட்டது.

    கேரளா

    கொண்டாட்டத்தால் ஏற்பட்ட கலவரம்!

    கால்பந்து ரசிகர்கள் கூடி இருந்த கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் போன்ற பல பகுதிகளில் அன்று(டிச:18) நள்ளிரவு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த கலவரத்தில் 3 பேருக்கு அருவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த கலவரத்தைத் தடுக்க சென்ற காவலர்கள் சிலரையும் அடித்திருக்கின்றனர்.

    இதையடுத்து, இந்த சண்டைகளில் ஈடுபட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கொச்சி கலூர் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுகள் முடிந்து வெளியேறும் போது ரசிகர்கள் சிலர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 2 காவலர்களை சாலையிலேயே தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவங்கள் கேரளாவின் பல பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கால்பந்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? சீனா
    பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை ஓடிடி
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் தமிழ்நாடு

    கால்பந்து

    'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025