NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
    இந்தியா

    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!

    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 22, 2022, 10:14 pm 0 நிமிட வாசிப்பு
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
    உலக கால்பந்து போட்டியில் வென்ற அர்ஜெண்டினா அணியினர்(படம்: The States Man)

    கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர். நேற்று முன்தினம் உலக கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்கள் ஒவ்வொரு முறை கால்பந்து போட்டிகள் நடக்கும் போதும் போஸ்டர் ஒட்டுவது, கேக் வெட்டுவது போன்ற காரியங்களை செய்வர். அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போன்ற அணிகளுக்கான ரசிகர்கள், குழுக்களாக இணைந்து கால்பந்து விளையாட்டை கொண்டாடுவார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம், அர்ஜெண்டினா அணி கால்பந்து இறுதி போட்டிகளில் வென்றது. இந்த மாபெரும் வெற்றியை அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால், இந்த கொண்டாட்டமே சிறிது நேரத்தில் வன்முறையாக மாறிவிட்டது.

    கொண்டாட்டத்தால் ஏற்பட்ட கலவரம்!

    கால்பந்து ரசிகர்கள் கூடி இருந்த கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் போன்ற பல பகுதிகளில் அன்று(டிச:18) நள்ளிரவு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 3 பேருக்கு அருவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தைத் தடுக்க சென்ற காவலர்கள் சிலரையும் அடித்திருக்கின்றனர். இதையடுத்து, இந்த சண்டைகளில் ஈடுபட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொச்சி கலூர் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுகள் முடிந்து வெளியேறும் போது ரசிகர்கள் சிலர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 2 காவலர்களை சாலையிலேயே தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் கேரளாவின் பல பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    கால்பந்து

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    கால்பந்து

    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி விளையாட்டு
    ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு விளையாட்டு
    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை விளையாட்டு
    800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023