NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.

    எழுதியவர் Nivetha P
    Feb 06, 2023
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.

    எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் வலம் வந்தநிலையில், இதுகுறித்து ஈ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்ட இடையீட்டு மனுகுறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றினை அளித்தது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம்.

    அவ்வாறு தேர்தெடுக்கப்படும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

    செய்தியாளர்கள் சந்திப்பு

    திடீர் திருப்பமாக வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அணி

    இதனைதொடர்ந்து, தென்னரசுவை வேட்பாளாராக ஏற்பது தொடர்பாக பதிலளிக்க ஓ.பி.எஸ். தரப்பு உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது ஒருதலைப்பட்சமானது என்று ஓ.பி.எஸ்.கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும், பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார்.

    இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஓ.பி.எஸ்.அணியின் மூத்த தலைவர்களான கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னம் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

    மேலும், இரட்டைஇலை சின்னம் எந்தவகையிலும் முடங்கி விடக்கூடாது என்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

    இதனால், அதிமுக சார்பில் தென்னரசு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    ஓ.பன்னீர் செல்வம்
    தேர்தல்
    ஈரோடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி எடப்பாடி கே பழனிசாமி
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025