NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
    இந்தியா

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
    எழுதியவர் Nivetha P
    Feb 06, 2023, 03:07 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர். எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் வலம் வந்தநிலையில், இதுகுறித்து ஈ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்ட இடையீட்டு மனுகுறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதனையடுத்து, இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றினை அளித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்தெடுக்கப்படும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

    திடீர் திருப்பமாக வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அணி

    இதனைதொடர்ந்து, தென்னரசுவை வேட்பாளாராக ஏற்பது தொடர்பாக பதிலளிக்க ஓ.பி.எஸ். தரப்பு உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது ஒருதலைப்பட்சமானது என்று ஓ.பி.எஸ்.கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஓ.பி.எஸ்.அணியின் மூத்த தலைவர்களான கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னம் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள். மேலும், இரட்டைஇலை சின்னம் எந்தவகையிலும் முடங்கி விடக்கூடாது என்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்தனர். இதனால், அதிமுக சார்பில் தென்னரசு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தேர்தல்
    அதிமுக
    ஓ.பன்னீர் செல்வம்
    ஈரோடு

    சமீபத்திய

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் பாலிவுட்
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா

    தேர்தல்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு

    அதிமுக

    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு எடப்பாடி கே பழனிசாமி

    ஓ.பன்னீர் செல்வம்

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை அதிமுக
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு சென்னை உயர் நீதிமன்றம்

    ஈரோடு

    ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர் வைரல் செய்தி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023