NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
    இந்தியா

    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு

    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023, 06:56 pm 0 நிமிட வாசிப்பு
    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
    சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம்

    விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் மட்டுமே சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். அதன் படி, தை அமாவாசை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்தது. அதன் படி, தை அமாவாசையான இன்று சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்களில் 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

    மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்த பக்தர்

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நுழைவுவாயில் பகுதியில் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமிதரிசனம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் சதுரகிரி மலையில் தங்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மலையேறிய கோவையை சேர்ந்த சிவக்குமார்(48) என்பவர் வனத்துர்க்கை கோயில் அருகே சென்றபொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அங்கிருந்த வனத்துறையினர் அவரது சடலத்தை அடிவாரப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாப்டூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்
    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023