NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
    சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம்

    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

    பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் மட்டுமே சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

    அதன் படி, தை அமாவாசை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.

    அதன் படி, தை அமாவாசையான இன்று சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்களில் 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

    போலீசார் விசாரணை

    மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்த பக்தர்

    இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    நுழைவுவாயில் பகுதியில் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

    இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமிதரிசனம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் சதுரகிரி மலையில் தங்கவும் தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மலையேறிய கோவையை சேர்ந்த சிவக்குமார்(48) என்பவர் வனத்துர்க்கை கோயில் அருகே சென்றபொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

    அங்கிருந்த வனத்துறையினர் அவரது சடலத்தை அடிவாரப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சாப்டூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    தமிழ்நாடு

    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு செய்தி
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை பொங்கல் திருநாள்
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025