NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை
    மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை

    டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் ஸ்வாதி மாலிவால், இவர் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை 10-15 கிமீ தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஸ்வாதி தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்ய சென்றேன்.

    அப்போது அங்கு குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர், என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டான்.

    அவனை பிடிக்க முயன்ற பொழுது எனது கையை கார் ஜன்னலில் சிக்க வைத்து அப்படியே இழுத்து சென்றான் என்று மேற்கூறியவாறு பதிவு செய்துள்ளார்.

    விசாரணை

    குடிபோதையில் கார் ஒட்டிய நபர் கைது

    மேலும், கடவுள் தான் தன்னை காப்பாற்றியதாக கூறிய அவர், டெல்லியில் மகளிர் ஆணைய தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்னும் பொழுது, மக்கள் நிலைமையை நினைத்துபாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து காவல்அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிபோதையில் இருந்த அந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்சந்திராவை(47) கைது செய்துள்ளதாக கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் டெல்லி கஞ்சவாலா பகுதியில் அஞ்சலிசிங் என்னும் பெண் இருசக்கரத்தில் வரும் பொழுது, காரில்சிக்கி கிட்டத்தட்ட 12கிமீ இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தசம்பவம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கேள்விகளை எழுப்பிய ஸ்வாதி மாலிவாலுக்கே தற்போது அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல் வைரல் செய்தி
    வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்! தொழில்நுட்பம்
    ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போட்டியாக களமிறங்கும் இந்திய அரசின் IndOS; தொழில்நுட்பம்
    ஜனவரி 17க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025