LOADING...
'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?
'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!

'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2025
08:35 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது. கரையை கடக்கும்போதே 'மோந்தா' புயலின் தீவிரம் படிப்படியாக குறைந்து தற்போது சாதாரண புயலாக (Cyclonic Storm) வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மோந்தா' புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலின் தாக்கத்தினால், தமிழகம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வானிலை நிலவரங்கள்

முக்கிய வானிலை நிலவரங்கள்

'மோந்தா' புயலானது ஆந்திரப் பிரதேசத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் காலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவுக்கு தெற்கே உள்ள கடலோரப் பகுதிகளில் இன்று அதிகாலையில் கடந்து சென்றது. புயல் தற்போது நர்சாபூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு-வடமேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. தரைப்பகுதியில் நகர்ந்ததால், அதன் வேகம் குறைந்துள்ளது. புயல் கரையை கடந்தபோது, ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா போன்ற கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், பலி எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது.

Advertisement

ஊரடங்கு

புயல் காரணமாக முன்னெச்சரிக்கை ஊரடங்கு

புயல் பாதித்த 7 மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம், விஜயவாடா விமான நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 120 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement