NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    வடமாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று கணிப்பு

    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடந்த சில நாட்களாக கடும் குளிரினை எதிர்கொண்டு வருகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்த நிலையில்,

    நேற்று டெல்லி சஃப்தர்ஜங்கில் 1.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாகவே டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரிக்கு குறைந்துள்ளது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 4.7 டிகிரி செல்ஸியாசாகவும், சனிக்கிழமை 10.2 டிகிரி செல்ஸியாசாகவும் பதிவாகியது.

    இதனை தொடர்ந்து டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்திரப்பிரேதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மைனஸ் 2.5டிகிரியும், சிகாரில் மைனஸ் 2டிகிரியும், அல்வாரில் 0டிகிரியும், ஹரியானா ஹிசார் நகரில் 0.8டிகிரியும் பதிவாகியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.

    காற்று மாசுபாடு

    குளிர் அலை வீசுவது குறித்து வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    முன்னதாக, இமயமலையில் நாட்டின் வடமேற்கு சமநிலையில் குளிர் அலை வீச வாய்ப்புள்ளது என்பதால் வடமாநிலங்களின் பல பகுதிகளில் வரும் இரண்டு நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    மேலும் வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய இந்தியாவில் 2-4 வரை வெப்பநிலை குறையும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த கடும் குளிர் காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடும் மிக மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தர குறியீடு 337ஐ தொட்டுள்ளதோடு, மோசமான நிலையே தற்போது வரை உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குளிர்காலம்
    காற்று மாசுபாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குளிர்காலம்

    குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்! உலகம்

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025