LOADING...
பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகாரில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
10:51 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வேயின் அசன்சோல் பிரிவுக்கு உட்பட்ட லஹாபன் மற்றும் சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு சுமார் 11.25 மணியளவில் ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பாதிப்பு

ரயில் போக்குவரத்துப் பாதிப்பு

இந்த விபத்து காரணமாக ஹவுரா-பாட்னா-டெல்லி இடையேயான முக்கிய வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முடங்கியது. இதன் விளைவாக இரவு முழுவதும் சுமார் 24 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா ஆகிய இடங்களிலிருந்து விபத்து நிவாரண ரயில்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement