NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
    இந்தியா

    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!

    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023, 06:31 pm 0 நிமிட வாசிப்பு
    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!
    உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழியடைந்த ஹல்த்வானி மக்கள்

    உத்தரகண்ட் ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்ற உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரகண்ட் ஹல்த்வானியில் உள்ள 29 ஏக்கர் கொண்ட பகுதி ரயில்வேக்கு சொந்தமானது. ஆனால், இந்த பகுதியில் கிட்டத்தட்ட 4000 வீடுகள், 11 தனியார் பள்ளிகள், 4 அரசு பள்ளிகள், 10 மசூதிகள், 1 வங்கி, 4 கோயில்கள் ஆகியவை அமைந்துள்ளன. ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இந்த மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு உத்தராகண்ட் உயர்நீதி மன்றத்த்தில் வழக்கு போடப்பட்டது. இதற்கு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் 4000 கும்பங்களையும் வெளியேற உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

    இந்த மாதம் 9ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை இன்று(ஜன:5) விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. "ஒரே இரவில் 50,000 பேரை வெளியேற்ற முடியாது. நிலத்தில் உரிமை இல்லாத மக்களை முதலில் வகைப்படுத்த வேண்டும். பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனையை நாம் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்." என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023