NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம்
    திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது

    திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் பக்திப் பரவசம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 13, 2024
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலையில் நடந்து வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட நிலையில், திருவிழாவின் சிறப்பம்சமாக, 2,668 அடி அண்ணாமலை மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 4 அன்று பாரம்பரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    அடுத்த நாட்களில், கோயிலில் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலம் சென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகா தீப விழாவில் முடிவடைந்தது.

    டிசம்பர் 10 ஆம் தேதி, புதிய கோயில் தேர் திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

    சன்னதிக்குள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீப வழிபாடு நடத்தப்பட்டது.

    மகா தீபம்

    மகா தீபம் ஏற்றுதல்

    விழாவின் உச்சக்கட்டம் மாலை 5.58 மணிக்கு நடந்தது. சிவபெருமானின் தெய்வீகச் சுடரைக் குறிக்கும் பர்வதராஜ குலத்தாரால் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    மலையையும் கீழுள்ள நகரையும் பிரகாசிக்கச் செய்த பெரிய சுடர் ஏற்றியதால் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷங்களை எழுப்பினர்.

    பாரம்பரிய இசைக்கருவிகளும் கைலாய இசையும் ஆன்மிகம் நிறைந்த சூழலை கூட்டியது.

    இந்த ஆண்டு கார்த்திகையுடன் பௌர்ணமி வராத நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் திரண்டதால், புனிதமான 14 கி.மீ. பாதையில் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ட்விட்டர் அஞ்சல்

    மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி

    #Watch | திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது!#SunNews | #Tiruvannamalai | #TiruvannamalaiDeepam2024 pic.twitter.com/qiTnmoZDbc

    — Sun News (@sunnewstamil) December 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    கார்த்திகை தீபம்
    திருவிழா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    திருவண்ணாமலை

    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம்  ஜம்மு காஷ்மீர்
    ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு  ஜம்மு காஷ்மீர்
    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழ்நாடு
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை  ஜம்மு காஷ்மீர்

    கார்த்திகை தீபம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்  திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு திருவண்ணாமலை

    திருவிழா

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்  விருதுநகர்
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது திருப்பதி
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது  திருச்சி
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  ஆடி

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு மழை
    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு விடுமுறை
    பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025