NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

    ஆந்திராவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் YSRC கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் (ஜேஎஸ்பி) பாஜக ஒரு மூலோபாய கூட்டணியை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா 

    2024 ஆந்திரா சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு 

    மக்களவைத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி வெற்றிபெறப் போகிறது என்று TV5 தெலுங்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த கருத்துக்கணிப்பில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணிக்கு 161 சட்டமன்ற இடங்களும், ஜெகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சிக்கு 14 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

    2024 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பீப்பிள்ஸ் பல்ஸ் கணித்துள்ளது.

    175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டசபையில் பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி 111-135 இடங்களைக் கைப்பற்றும் அதே வேளையில், ஒய்எஸ்ஆர்சி 45-60 இடங்களைப் பெறக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    பாஜக
    ஜெகன் மோகன் ரெட்டி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    ஆந்திரா

    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை
    சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  நீதிமன்ற காவல்
    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இந்தியா

    பாஜக

    'நேதாஜி முதல் பிரதமர்' என கங்கனா ரனாவத் கூறியதை கண்டித்த நேதாஜி குடும்பத்தினர் கங்கனா ரனாவத்
    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு  காங்கிரஸ்
    கங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார் பொழுதுபோக்கு

    ஜெகன் மோகன் ரெட்டி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் உயர்நீதிமன்றம்

    காங்கிரஸ்

    ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்; 'ஹீரோவாகவே இருப்பார்' என மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு மல்லிகார்ஜுன் கார்கே
    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் பாஜக
    பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம் ராகுல் காந்தி
    காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025