NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு 
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    02:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரிலான பாதயாத்திரையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா மதுரைக்கு வருகை தந்தார்.

    அதன் பின்னர், அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.

    இந்நிலையில் அமித்ஷா இன்று(ஜூலை.,29)காலை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என்று தகவல்கள் வெளியானது.

    இதனையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பேச்சு 

    அப்துல் கலாமின் எதிரிகள் குறித்தும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது - அமித்ஷா

    மறைந்த அப்துல் கலாம் குறித்த விவரங்கள் அடங்கிய 'கலாம் நினைவுகள் இறப்பதில்லை' என்னும் தலைப்பிலான புத்தகத்தினை வெளியிட்ட அமித்ஷா, அந்நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார்.

    அவர் பேசியதாவது, "ராமேஸ்வரம் என்னும் சிறிய ஊரில் பிறந்து, வளர்ந்து உலகமே வியக்கும் வண்ணம் பெரும் விஞ்ஞானியாக உயர்ந்தவர் அப்துல் கலாம். ஒரு நாட்டின் ஜனாதிபதி என்னும் உயர் பதவியில் இருந்த போதிலும், சாதாரண தொழிலாளியிடம் நல்லுறவு பேணியவர் அப்துல் கலாம்" என்று கூறியுள்ளார்.

    மேலும், "அவரது போராட்டங்கள், வெற்றிகள், அவரது தோல்விகள், அவரது நண்பர்கள், அவ்வளவு ஏன் அவரது எதிரிகள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.

    அப்துல் கலாமின் எதிரிகள் என்று அமித்ஷா குறிப்பிட்டு கூறியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    ராமேஸ்வரம்
    அப்துல் கலாம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமித்ஷா

    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இலங்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு

    அப்துல் கலாம்

    நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025