Loading...
பணம் சம்பாதித்தும் ஏழையாகவே இருக்கிறீர்களா? 50-30-20 விதியை பயன்படுத்தி சொத்து சேர்க்கும் ரகசியம்
50-30-20 விதியைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கும் ரகசியம்

பணம் சம்பாதித்தும் ஏழையாகவே இருக்கிறீர்களா? 50-30-20 விதியை பயன்படுத்தி சொத்து சேர்க்கும் ரகசியம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2026
01:21 pm

செய்தி முன்னோட்டம்

பெரும்பாலான மக்கள் தங்களது உழைப்பில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வங்கி சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைக்கின்றனர். ஆனால், பணவீக்கத்தின் காரணமாக வங்கியிலிருக்கும் பணத்தின் உண்மையான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. பணத்தை சும்மா சேமித்து வைப்பது மட்டுமே உங்களை பணக்காரராக மாற்றாது. மாறாக, சேமிக்கும் பணத்தை சரியான சொத்துக்களாகவும் முதலீடுகளாகவும் மாற்றுவதே உண்மையான நிதி சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். தவறான சேமிப்புப் பழக்கமே பலரையும் ஏழ்மையிலேயே வைத்திருக்கிறது.

பட்ஜெட்

நிதி சுதந்திரத்திற்கான 50-30-20 பட்ஜெட் விதி

உங்கள் மாத வருமானத்தை சரியான முறையில் பிரித்து செலவழிக்க '50-30-20' என்ற நிதி விதி உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விதியின்படி, உங்கள் நிகர வருமானத்தில் 50 சதவீத பணத்தை வீட்டு வாடகை, மளிகை மற்றும் மருத்துவ செலவுகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ஒதுக்குங்கள்.

அடுத்த 30 சதவீத பணத்தை சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விருப்ப பொருட்களுக்கு செலவிடலாம்.

மீதமுள்ள 20 சதவீத பணத்தைக் கட்டாயமாக சேமிப்பிற்கு பதிலாக பங்குச் சந்தை, தங்கம் அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும்.

பணத்தைப் பெருக்குதல்

சேமிப்பை சொத்துக்களாக மாற்றி பணத்தைப் பெருக்குதல்

வங்கி சேமிப்புக் கணக்கில் கிடக்கும் பணம் உங்களுக்கு எவ்வித கூடுதல் வருமானத்தையும் தராது.

எனவே, உங்கள் முதலீட்டுக்கான 20 சதவீத பணத்தை வருமானம் தரக்கூடிய சொத்துக்களை உருவாக்குவதில் பயன்படுத்த வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யும்போது கூட்டு வட்டி மூலம் உங்கள் பணம் பல மடங்காக பெருகும்.

நீங்கள் தூங்கினாலும் உங்களுக்காக பணம் உழைக்கும் சூழலை உருவாக்குவதே சொத்து சேர்க்கும் கலையின் முதன்மை உத்தியாகும்.

ADVERTISEMENT

ஆசைக் கட்டுப்பாடு

தேவையற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தி சொத்து சேர்க்கும் முறை

30 சதவீத விருப்ப செலவுகளில் சிறிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதன் மூலம் முதலீட்டுக்கான தொகையை மேலும் அதிகரிக்க முடியும்.

தேவையில்லாத ஆடம்பர பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து, அந்தப் பணத்தையும் முதலீட்டிற்குள் திருப்பி விடலாம்.

உங்கள் மாத சம்பளத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினால், மிகக் குறுகிய காலத்தில் பெரும் சொத்துக்களை சேர்க்க முடியும்.

இந்த 50-30-20 விதியைக் கண்டிப்புடன் பின்பற்றுவதன் மூலம் எவரும் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு நிதி சுதந்திரத்தைப் பெற முடியும்.

ADVERTISEMENT