NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமேசானில் ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த இங்கிலாந்து நபர்- நாய் உணவை பெற்றதால் அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமேசானில் ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த இங்கிலாந்து நபர்- நாய் உணவை பெற்றதால் அதிர்ச்சி
    லேப்டாப்பிற்கு பதிலாக பெடிகிரி டெலிவரி செய்த அமேசான்

    அமேசானில் ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக் ப்ரோ ஆர்டர் செய்த இங்கிலாந்து நபர்- நாய் உணவை பெற்றதால் அதிர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Dec 24, 2022
    11:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய அவசர உலகில் பலர் நேரில் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தப்படியே ஆர்டர் செய்து வாங்கி கொள்கிறார்கள்.

    இதற்கான பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் உலகம் முழுக்க செயல்பட்டு வருகிறது.

    அதன்படி இங்கிலாந்தில் உள்ள ஆலன் என்பவர் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை தனது மகளுக்காக அமேசானில் ஆர்டர் செய்துள்ளார்.

    1,20,000 மதிப்புள்ள இந்த லேப்டாப்பை மறுநாளே டெலிவரி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவர் ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அவர் கோரிக்கை படி, மறுநாளே டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்சலை திறந்துபார்த்த ஆலன் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

    ஏனெனில், பார்சலில் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக நாய்களின் உணவான பெடிகிரி இருந்துள்ளது.

    மன்னிப்பு கோரிய அமேசான்

    15 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு பணத்தை திரும்ப கொடுக்க ஒப்புக்கொண்ட நிறுவனம்

    இது குறித்து போலீசில் புகார் செய்த ஆலன், அமேசானின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் அவருக்கு சரியாக பதில் அளிக்காத நிறுவன ஊழியர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பணத்தை திரும்ப தர ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆலன் கூறுகையில், "நான் 20 வருடங்களாக அமேசான் நிறுவன வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளேன். இதுவரை இவ்வாறு எதுவும் நடந்தது இல்லை. ஆனால் இம்முறை இந்த நிகழ்வு எனக்கு பெரும் மன அழுத்தத்தை தந்ததோடு, அவர்கள் என்னை நடத்திய விதம் என்னை காயப்படுத்தியது.

    ஒரு வழியாக நிறுவன சார்பில் மன்னிப்பு கோரப்பட்டதையடுத்து, பணத்தை திரும்ப பெற உதவுவதாக அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025