NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
    ஜி-20 மாநாடு பிரதிநிதிகள் வருகை - நாளை பொது மக்களுக்கு மாமல்லபுரம் செல்ல அனுமதி இல்லை

    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் கொண்ட நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் கல்வித்துறை சார்ந்த கருத்தரங்கம் இன்று(ஜன.,31) துவங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில், நாளை 3 மணி முதல் 6 மணி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் சென்று புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

    இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

    அறிவுறுத்தல்கள்

    நாளை பொது மக்களுக்கு அனுமதி இல்லை

    மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, நாளை மாமல்லபுரம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தொல்லியத்துறை அறிவித்துள்ளது.

    இதனால் அன்று ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டர்களின் டிக்கெட் வழங்கப்படாது.

    இதுகுறித்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் நேற்று தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்பொழுது, விடுதிகளில் யாரும் தங்கியிருக்க கூடாது, நீண்ட நாட்களாக யாரேனும் தங்கியிருந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்கவேண்டும்.

    மேலும், புது நபர்கள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாபலிபுரம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மகாபலிபுரம்

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் தமிழ்நாடு

    இந்தியா

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; கமலஹாசன்
    இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ! துணிவு
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025