NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
    உலகம்

    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி

    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 02:46 pm 1 நிமிட வாசிப்பு
    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி
    ஜி-20 மாநாடு பிரதிநிதிகள் வருகை - நாளை பொது மக்களுக்கு மாமல்லபுரம் செல்ல அனுமதி இல்லை

    இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் கொண்ட நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கல்வித்துறை சார்ந்த கருத்தரங்கம் இன்று(ஜன.,31) துவங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில், நாளை 3 மணி முதல் 6 மணி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் சென்று புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

    நாளை பொது மக்களுக்கு அனுமதி இல்லை

    மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நாளை மாமல்லபுரம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தொல்லியத்துறை அறிவித்துள்ளது. இதனால் அன்று ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டர்களின் டிக்கெட் வழங்கப்படாது. இதுகுறித்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் நேற்று தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்பொழுது, விடுதிகளில் யாரும் தங்கியிருக்க கூடாது, நீண்ட நாட்களாக யாரேனும் தங்கியிருந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்கவேண்டும். மேலும், புது நபர்கள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மகாபலிபுரம்
    இந்தியா

    சமீபத்திய

    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் ராகுல் காந்தி

    மகாபலிபுரம்

    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது காவல்துறை
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் தமிழ்நாடு
    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023