NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
    அத்துமீறி நுழைந்த மீன்பிடி படகுகள்

    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்துள்ளோம் என்றும், 79 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம், புட்ச் கடல்பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, 79 மீன்பிடி படகுகள் அத்துமீறி உள்ளே நுழைவதை கண்டறிந்து மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை சோதனை செய்ததில், 22 பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

    குஜராத் எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் தகவல்

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் போதை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது

    அவர்கள் வந்த படகுகளில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்ததை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவலப்படையினர், இந்திய எல்லை பாதுகாப்புப்படை போலீசிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 2022ம் ஆண்டில், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பொருட்கள், ரூ.2.49 கோடி மதிப்புள்ள கஞ்சா முதலியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்திய - பாகிஸ்தான் எல்லை 7,419 கி.மீ. தொலைவு கொண்டதாகும்.

    இதில் ராஜஸ்தானின் பார்மர் முதல் ராணா கட்ச் பகுதி வரை 826 கி.மீ. தொலைவு கொண்ட எல்லைப் பகுதியை குஜராத் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025