NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
    இந்தியா

    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023, 04:42 pm 1 நிமிட வாசிப்பு
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
    அத்துமீறி நுழைந்த மீன்பிடி படகுகள்

    குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்துள்ளோம் என்றும், 79 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், புட்ச் கடல்பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, 79 மீன்பிடி படகுகள் அத்துமீறி உள்ளே நுழைவதை கண்டறிந்து மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை சோதனை செய்ததில், 22 பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் போதை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது

    அவர்கள் வந்த படகுகளில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்ததை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவலப்படையினர், இந்திய எல்லை பாதுகாப்புப்படை போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் 2022ம் ஆண்டில், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பொருட்கள், ரூ.2.49 கோடி மதிப்புள்ள கஞ்சா முதலியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லை 7,419 கி.மீ. தொலைவு கொண்டதாகும். இதில் ராஜஸ்தானின் பார்மர் முதல் ராணா கட்ச் பகுதி வரை 826 கி.மீ. தொலைவு கொண்ட எல்லைப் பகுதியை குஜராத் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    குஜராத்

    சமீபத்திய

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தூத்துக்குடி
    "39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு": பாடகி சித்ராவை பாராட்டிய கவிஞர் வைரமுத்து வைரல் செய்தி

    குஜராத்

    மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு இந்தியா
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை இந்தியா
    மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ வைரல் செய்தி
    வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023