NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
    தேசிய விருது பெற்ற பொறியாளர் சதீஷ்

    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர் சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    மறுபக்கம், தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணை ஒன்றினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார்.

    இவரது பண்ணையில் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனி அறைகள் அமைத்து அவர் நாய்களை வளர்த்து வருகிறார்.

    20 சென்ட்டில் நாய்களை வளர்த்து வந்த சதீஷுக்கு இட பற்றாக்குறை இருந்ததால், தங்களது விவசாய நிலத்தில் சதீஷின் நாய் பண்ணைக்காக ஒரு ஏக்கரை ஒதுக்கி அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளார்களாம்.

    குவியும் பாராட்டுக்கள்

    2022ம் ஆண்டிற்கான 'நாட்டு இன காப்பாளர்' என்னும் தேசிய விருது பெற்ற பொறியாளர் சதீஷ்

    இந்நிலையில், சிப்பிப்பாறை என்னும் நாய் இனத்தை பாதுகாத்து வளர்ந்து வரும் சதீஷிற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் மூலம் 2022ம் ஆண்டிற்கான நாட்டு இன காப்பாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சதீஷ் கூறியுள்ளதாவது, "எங்களிடம் உள்ள அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியோரால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

    நாட்டு நாய் இனத்தின் வளர்ச்சிக்காகவே நாய் பண்ணை நடத்துவதோடு, நாய்களை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம் வைரல் செய்தி
    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்? இந்தியா
    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது இந்தியா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025