NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
    இந்தியா

    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்

    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023, 04:12 pm 1 நிமிட வாசிப்பு
    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்
    தேசிய விருது பெற்ற பொறியாளர் சதீஷ்

    உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர் சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மறுபக்கம், தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணை ஒன்றினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனி அறைகள் அமைத்து அவர் நாய்களை வளர்த்து வருகிறார். 20 சென்ட்டில் நாய்களை வளர்த்து வந்த சதீஷுக்கு இட பற்றாக்குறை இருந்ததால், தங்களது விவசாய நிலத்தில் சதீஷின் நாய் பண்ணைக்காக ஒரு ஏக்கரை ஒதுக்கி அவரது குடும்பத்தினர் கொடுத்துள்ளார்களாம்.

    2022ம் ஆண்டிற்கான 'நாட்டு இன காப்பாளர்' என்னும் தேசிய விருது பெற்ற பொறியாளர் சதீஷ்

    இந்நிலையில், சிப்பிப்பாறை என்னும் நாய் இனத்தை பாதுகாத்து வளர்ந்து வரும் சதீஷிற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் மூலம் 2022ம் ஆண்டிற்கான நாட்டு இன காப்பாளர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சதீஷ் கூறியுள்ளதாவது, "எங்களிடம் உள்ள அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியோரால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நாட்டு நாய் இனத்தின் வளர்ச்சிக்காகவே நாய் பண்ணை நடத்துவதோடு, நாய்களை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் மாவட்ட செய்திகள்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    வைரல் செய்தி

    யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் கோலிவுட்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023