NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்
    ஒன்றிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    11:39 am

    செய்தி முன்னோட்டம்

    நிர்பயா திட்டத்தின் அடிப்படையில் பொதுபோக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புகருதி மத்தியஅரசின் நிதியுதவியுடன், தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் முதல்கட்டமாக 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை தமிழக முதல்வர் கடந்தாண்டு துவக்கி வைத்தார்.

    இதனையடுத்து இரண்டாம் கட்டமாக, தற்போது 72.25கோடி செலவில் 2500பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் முதல் 500 பேரூந்துகளோடு சேர்த்து மொத்தம் 2,330பேருந்துகள் மற்றும் 63இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பேருந்திலும் வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒரு ஒலிபெருக்கி ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

    காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல்

    அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும் - ஒரு நிமிட காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும்

    இவ்வகை பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தானை அழுத்தினால் ஒலிபெருக்கியில் ஒலி எழுப்பப்படும்.

    இது ஓட்டுநர், நடத்துனர் மற்றும் உடன் பயணிப்போர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    மேலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தானாகவே ஒரு நிமிட காணொளி காட்சி உடனடியாக எடுத்து அனுப்பப்படும்.

    இந்த பதிவு ஆய்வு செய்யப்பட்டு, அசாம்பாவிதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கேமரா பொருத்தப்பட்ட பேருந்துகளையும், ரூ.4.72 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    சென்னை

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    உதயநிதி ஸ்டாலின்

    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! மு.க ஸ்டாலின்
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படம்
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025