NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு
    டெல்லி குடியரசு தின விழாவில் காவலர்களுக்கான ஜனாதிபதி விருது பட்டியலில் 3 தமிழக காவலர்கள் தேர்வு

    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 25, 2023
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் 74வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபக்தா எல் சிசி கலந்துகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியையேற்றி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

    இதில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் இந்த குடியரசு தினவிழாவில், காவலர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்தாண்டிற்கான விருது பெறும் காவலர்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    21 தமிழக காவல்துறையினர்

    குடியரசு தலைவரின் 'மெச்சத்தக்க சேவை'க்கான விருது

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி. பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு இந்த ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஜன.,26) நாடுமுழுவதும் குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியிலும் மற்ற முக்கிய இடங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025