NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
    இந்தியா

    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்

    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 09:27 am 1 நிமிட வாசிப்பு
    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
    ஓலைச்சுவடி அருங்காட்சியகம்

    பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் முக்கிய குறிப்புகளை நம் முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். பனை மரத்தில் உள்ள ஓலைகளை தனித்தனியே பிரித்து, ஒத்த அளவாக உள்ள ஓலைகளை தேர்ந்தெடுத்த எழுத பயன்படுத்துவர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது. அவற்றை எழுதுவதற்கு தக்கவாறு மிருதுவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஓலைகளை பதப்படுத்துவதன் மூலம் அவற்றை விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கலாம். இதற்காக பல வழிமுறைகளை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். அதனாலேயே, அக்காலத்தில் எழுதப்பட்ட சுவடுகள் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு 'ஓலைச்சுவடி' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'ஓலை' என்றும், 'சுவடி' என்றும் இரண்டு பெயர்களை பெற்று விளங்குகிறது.

    கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் பனை ஓலை காட்சியகம்

    இவ்வளவு சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள் குறித்த முக்கியத்துவத்தை தற்போதைய காலக்கட்டத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக கேரளா மாநிலத்தில் ஓலைச்சுவடி அருங்காட்சியகம் நடைபெறுகிறது. கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம் ஆகும். நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ், பனைஓலை சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது வங்கதேசம் டி20 கிரிக்கெட்

    இந்தியா

    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி தமிழ்நாடு
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023