NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்
    ஓலைச்சுவடி அருங்காட்சியகம்

    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் முக்கிய குறிப்புகளை நம் முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

    பனை மரத்தில் உள்ள ஓலைகளை தனித்தனியே பிரித்து, ஒத்த அளவாக உள்ள ஓலைகளை தேர்ந்தெடுத்த எழுத பயன்படுத்துவர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது.

    அவற்றை எழுதுவதற்கு தக்கவாறு மிருதுவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஓலைகளை பதப்படுத்துவதன் மூலம் அவற்றை விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கலாம்.

    இதற்காக பல வழிமுறைகளை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். அதனாலேயே, அக்காலத்தில் எழுதப்பட்ட சுவடுகள் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு 'ஓலைச்சுவடி' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'ஓலை' என்றும், 'சுவடி' என்றும் இரண்டு பெயர்களை பெற்று விளங்குகிறது.

    1.5கோடி ஓலைச்சுவடிகள்

    கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் பனை ஓலை காட்சியகம்

    இவ்வளவு சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள் குறித்த முக்கியத்துவத்தை தற்போதைய காலக்கட்டத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அதற்கு ஏதுவாக கேரளா மாநிலத்தில் ஓலைச்சுவடி அருங்காட்சியகம் நடைபெறுகிறது.

    கேரள அரசின் ஆவணத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இது உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம் ஆகும்.

    நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ், பனைஓலை சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி மோடி
    மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை இந்தியா
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள் விமானம்
    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025