NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா
    சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தல்

    சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023
    10:38 am

    செய்தி முன்னோட்டம்

    2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கான முன்னேற்பாடுகளை கடந்த வருடமே தமிழக அரசும் செய்து வந்தது.

    இந்நிலையில் உலகளவில் சிறுதானியங்கள் உற்பத்தில் 5வது இடத்தில் உள்ளது என, இந்தியா முன்மொழியப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் இந்தாண்டு பலவிதமான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமில விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்கள் அதிக நன்மைகள் கொண்டதாகும்.

    இந்தியாவில் 2021-22ம் ஆண்டில் சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின் படி, 14.89 லட்சம் பள்ளிகளில் 26.52 கோடி குழந்தைகள் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    2022-23ம் ஆண்டு ரூ.30,496.82 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது

    பள்ளி குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பயனாளர்களுக்கு தினமும் சூடான சத்தான உணவு

    இதனையடுத்து தற்போது பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுவருகிறது.

    சிறுதானியங்கள் குழந்தைகளின் உணவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதால், பள்ளிகுழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பயனாளிகளுக்கு தினமும் ஒரு சத்தான உணவு வழங்கப்படுகிறது.

    கம்பு, வரகு, ராகி, குதிரைவாலி, திணை போன்றவற்றுடன் 150மிலி கிளாஸ் பால் மற்றும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது.

    இதனால் மில்லியன் கணக்கான சிறுதானிய விவசாயிகளுக்கு, கோழிபண்ணை உரிமையாளருக்கு உற்பத்தி பெருகுகிறது, ஊக்கமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதான் மந்திரி போஷன், சக்தி நிர்மான் மற்றும் சஷம் அங்கன்வாடி & போஷன்2.0 ஆகிய இரண்டு திட்டங்கள் பிரதானமாக உள்ளன.

    2022-23ம் ஆண்டு ரூ.30,496.82 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக சிறுதானியங்கள் சேர்ப்பதன் மூலம் திட்டத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் தமிழ்நாடு
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள் பணம் டிப்ஸ்
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025