NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு
    யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார்

    இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 06, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் தலைசிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான வரைவு கொள்கையை தற்போது யுஜிசி வெளியிட்டுள்ளது.

    யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் இது குறித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, வெளிநாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைகளை துவங்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

    அப்படியே அனுமதி கோரினாலும், முதலில் 10 ஆண்டுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

    மேலும் இந்தியாவில் முழு நேரமாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினால் மட்டுமே இந்தியாவில் பல்கலைக்கழக வளாகம் அமைக்க அனுமதி அளிக்கப்படும்,

    ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படும் பட்சத்தில் வளாகம் அமைக்க அனுமதி தரப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கட்டண விவரங்கள் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்

    அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு இம்மாத இறுதியில், இறுதி விதிமுறைகள் அறிவிக்கப்படும்

    இதனையடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் இந்திய பல்கலைக்கழக கல்வித்தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படும்.

    மாணவர்கள் சேர்க்கையினை அவர்கள் சுதந்திரமாக மேற்கொள்ளலாம், கல்வி கட்டணத்தை அவர்களே நிர்ணயிக்கும் பட்சத்தில்,

    அது குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    வெளிநாட்டினர் இங்கு வளாகம் அமைக்க வழங்கப்படும் நிதியுதவிகள் மத்திய அரசின் அந்நிய செலவாணி பரிமாற்ற சட்டத்திற்கு உட்பட்டதாகும்.

    இந்த மாத இறுதியில் அனைவரது கருத்துக்களை கேட்ட பின்னர், இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் உரிமத்தை நீட்டிக்க 9ம் ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025