NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
    இந்தியா

    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு

    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023, 06:18 pm 0 நிமிட வாசிப்பு
    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை வைத்து தைத்த மருத்துவர்

    உத்திரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பான்ஸ் கெரி என்னும் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக நஸ்ரானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மத்லூப், அஜாக்கிரதையாக கைக்குட்டையை நஸ்ரானா வயிற்றின் உள்ளே வைத்து தையல் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவரிடம் அவர்கள் கேட்டபொழுது, குளிர் காரணமாக கூட வயிற்றில் வலி ஏற்படக்கூடும் என்று கூறி, மருந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கி நஸ்ரானா சிகிச்சை பெற்றுள்ளார்.

    வயிற்றில் கைக்குட்டை இருந்தது ஸ்கேன் மூலம் கண்டுபிடிப்பு

    ஐந்து நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு சென்ற நஸ்ரானாவிற்கு வயிற்று வலி அதிகரித்து, வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ஷம்ஷேர் அலி, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மனைவி நஸ்ரானாவை அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். ஸ்கேனில் கைக்குட்டை ஒன்று அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர், நஸ்ரானாவிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கைக்குட்டை வெளியே அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஷம்ஷேர் அலி, தலைமை மருத்துவ அலுவலர் ராஜீவ் சிங்காலிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ராஜீவ் சிங்கால், குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், மருத்துவர் மத்லூப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023