NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்
    இந்தியா

    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்

    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 03:48 pm 1 நிமிட வாசிப்பு
    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்
    நீதி கோரி போராட்டம் நடத்தும் அஞ்சலி சிங் மாமா

    டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கார் ஓட்டி சென்ற 5பேரை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள். முதலில் அஞ்சலி காரில் சிக்கியது தெரியாது என்று கூறிய இவர்கள், பின்னர் தெரிந்தே தான் காரை ஒட்டினோம் என்று கூறினார்கள். அதே போல், அஞ்சலியுடன் பயணித்ததாக கூறி, அவர் மதுபோதையில் வண்டி ஓட்டினார் என்று கூறிய நிதி மீது போதைபொருள் கடத்தல் வழக்கு பதிந்துள்ளது போலீசாருக்கு பின்னர் தெரியவந்துள்ளது. இதுபோன்று பல விவகாரங்கள் புதைந்துள்ள நிலையில், இவ்வழக்கில் இன்னமும் கொலை வழக்கிற்கான பிரிவு சேர்க்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    டெல்லி சுல்தான்பூரி காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் மேற்கொள்ளும் அஞ்சலியின் மாமா

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சலி சிங் மாமாவும் மற்றும் சிலரும் சுல்தான்பூரி காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், துணை காவல் ஆணையரிடம் தம்மை பேச வைப்பதாகவும், 302வது பிரிவை வழக்கில் சேர்ப்பது தனது கையில் இல்லை என்றும் காவல் அதிகாரி கூறுகிறார். குற்றவாளிகளே செய்த தவறை ஒப்புக்கொண்ட பிறகு, காவல்துறை பார்க்க வேண்டியது என்ன மீதியுள்ளது?' என்று அவர் கேள்வியெப்பியுள்ளார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொருவர், "இதுவே அஞ்சலி அரசியல்வாதி மகளாகவோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மகளாகவோ இருந்திருந்தால் போலீசாரின் நடவடிக்கை இவ்வளவு மெல்லவா இருந்திருக்கும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து, "302வது பிரிவு சேர்க்கப்படும் வரை எங்கள் போராட்டம் நிறுத்தப்படாது" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    போராட்டம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023