NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்
    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்-கையில் ஒற்றை செங்கலை ஏந்தி தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

    2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம்

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது.

    இதற்காக மதுரை தோப்பூரில் உடனே இடமும் தேர்வு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான நிதிகள் ஏதும் ஒதுக்கப்படாமல் தாமதம் நீட்டித்து வருகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டும் இதுவரை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை.

    சில நாட்களுக்கு முன்னதாக 'மதுரை எய்ம்ஸ் எங்கே' என்ற கேள்வியோடு மதுரை மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

    நிதியமைச்சருக்கு கண்டனம்

    கையில் ஒற்றை செங்கலை ஏந்தி தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

    மேலும், மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் சார்பாக அண்மையில் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று(பிப்.,1) 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்திலேயே சிபிஎம் கட்சிகளின் தமிழக எம்பி-க்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் ஒற்றை செங்கலை கையில் ஏந்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், செல்வக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பட்ஜெட் 2023
    மதுரை

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    பட்ஜெட் 2023

    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் ஸ்டாலின்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் திரௌபதி முர்மு
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் நிர்மலா சீதாராமன்
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை இந்தியா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025